ஜெபம் செய்வோம்
எங்கள் அன்பான தகப்பனே கருணை உள்ள கர்த்தாவே இம்மட்டும் எம்மைக் காத்த எபிநேசரே நன்றி ஜயா திறப்பின் வாசலில் நிற்பதற்கு திறனைத் தந்தவரே நன்றி திக்கற்றுப் போக விடமாட்டேன் என்றவரே ஸ்தோத்திரம் வெட்கப்பட்டுப்போக விடமாட்டேன் என்றவரே ஸ்தோத்திரம்.
எம் இணையத்தளத்தோடு இணைந்திருக்கின்ற இதயங்களுக்காய் உம்மண்டை வருகின்றோம் தகப்பனே இதய பாரங்களை இறக்கிவைப்பதற்கு உதவிசெய்யுங்கப்பா இதயத்தின் வாஞ்சைகளை நிறைவேற்றிக் கொடுங்கப்பா இயேசுவின் இரத்தம் எல்லாவற்றையும் சுத்தமாக்கட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென். |